மனம் கண்ட ரணங்கள்

உண்பவன் அறியான்
உழைத்தவன் பசி!
கண்டவன் அறியான்
தாசியின் வலி!
உறங்கியவன் அறியான்
காவலன் கதி!
அனுபவங்கள்வேண்டும்
அர்த்தமாய் வாழ்வற்கு!
அவசியமாய் மதிப்பதற்கு!
அடுத்தவரையும் அங்கீகரிப்பதற்கு!
மனம் கண்ட ரணங்கள் ஆறும்
ஆறாத தழும்பாய் நினைவுகள்!