எழுத்து தளமே உமக்கு நன்றி

மறைவா யிருந்தயென்னை
உருவா யாக்கினாய் நன்றி !

கருவா யிருந்தயென் கவியை
நிறை வாக்கியிடம் தந்தாய் நன்றி !

புரியா வுலகதன்னில் புதிராக்கினாய்
பதரா யிருந்தயென்னை பயிராக்கினாய் !

விதியே யெனவிருந்தயெனை
விழியாய் வந்தெனக்கு ஒளியாகினாய் !

வழியறியா திருந்தயெனக்கு
வலை தளமாகி வழிகாட்டினாய் !

ஓராண்டில் நான் பயணிக்க
இலவசமாய் யென்கவியை பிரசவித்தாய்!

ஆதரவின்றி அலைந்தயெனக்கு
ஆயிரம் தோள்தந்து நிறைவாக்கினாய்!

தொடர்கவி படைத்திடவே
தொண்டுள்ளம் கொண்டு இறையாகினாய்!

எத்துனை யுரைத்தாலும் எனை
உந்தன் கடனாக்கினாய் !!

புத்தகம் வாங்கிட காசுமில்லை
புத்துணர்வுக்கு வழியுமில்லை !

உந்தனை நித்தம் வாசித்தே வளர்கின்றேன்
உந்துணைக்கு செலுத்துகிறேன் நன்றி !

எழுதியவர் : கனகரத்தினம் (3-Jan-15, 8:38 pm)
பார்வை : 61

புதிய படைப்புகள்

மேலே