சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015

தேதியை கிழிக்கும் மனிதா
சாதியை ஒழித்தால் என்ன..!
வியாதிகள் போல் இங்கு பரவி
உயிர்களை அழித்திடும் உண்ண...!

ஏழையின் வாழ்வில் ஏற்றம் இல்லை
காரணம் சாதியடா...!
தாழ்த்தப்பட்டோர் என்றே சொல்லி
முடங்குது நீதியடா...!

அட்டை போல ஒட்டிக்கொண்டு
ரத்தம் குடிக்கின்றதே....!
பட்டை தீட்டிய கத்தியை போல
யுத்தம் பிடிக்கின்றதே...!

சாதிகள் இங்கே வந்ததினாலே
நிம்மதி போனதடா....!
சாதிக்கழிவால் சமுத்திரம் கூட
சாக்கடையானதடா....!

மனிதனை மனிதனே அழித்திடவே
மதங்கள் பிறந்ததடா...!
சாதிக் கலவரம் பெருகியதால்
தினம் சாவுகள் கூடுதடா...!

சாதியை அறவே ஒழித்திடுவோம்....
மதங்களை முற்றிலும் அழித்திடுவோம்...
மனிதா இனி நாம் விழித்திடுவோம்....
நாம் மனிதன் என்றே ஒலித்திடுவோம்.....



படைப்புக்கு தானே முழு உரிமையாளர் என்று உறுதியளிக்கிறேன்.

பெயர் : அகத்தியா(ராஜ்கமல்)
வயது : 25
வசிப்பிடம்:இலக்கம் 10.முதல்தளம்,சிவசடையப்பர் கோவில் எதிரில்
பேட்டையான்சத்திரம்
தட்டாஞ்சாவடி
புதுச்சேரி-605 009
நாடு : இந்தியா
அழைப்பிலக்கம் : 9003606226-9943506226

எழுதியவர் : அகத்தியா (5-Jan-15, 11:42 pm)
பார்வை : 136

மேலே