என்னை நானே பிரிகிறேன்

இன்று அழகான ஒரு பிரிவு ....

நேற்றைய கண்ணீர் ...
கடந்த கால காயம்
இவற்றோடு என்னையும்
உன்னோடு
எடுத்துக்கொண்டு போன பிரிவு ...

பிரிவில் கூட சுகம் காண
நட்பிற்கே சாத்திய படுகிறது ....

உன் மீதான சமூக பார்வையையும்
என் மீதான சந்தேக பார்வையையும்
துடைக்க
நம் நட்பை தவிர எவற்றால் முடியும்
ஆகையால் தான்
வார்த்தைகளை
பகிர்வுகளை
நம்மை
கொடுத்து
நட்பை நீட்டித்துக்கொள்கிறோம்
நம் பிரிவின் மூலம்

நீ பெண்ணென்பதை
நான் ஆண் என்பதை
நாம் உணர்ந்ததில்லை
ஆனாலும்
உலகம் உணர்வதாயில்லை

நம்மை பற்றிய
காதல் பேச்சுக்களை
கேலியாக்கி
கதை பேச

நேற்றைய
காபி பொழுதிலிருந்து
இன்றைய
குட் நைட் பொழுது வரை
குறையில்லாமல் பகிர

பாரதி முதல்
பக்கத்துக்கு வீட்டு
பையனின் கவிதை வரை
எல்லாம் பேச

நம்மால் மட்டுமே முடியும்

எதைத்தான் பேசவில்லை
நாம்
பாலியல் பற்றி கூட
பள்ளி புத்தகம் போல
பேச
நம்மாலும் மருத்துவராலும் தான்
முடியும்

பேசி தீராத போதும்
நாமே தீர்த்துக்கொள்ள
முடிவெடுத்தோம்

இருந்தாலென்ன
என்னோடு நீயும்
உன்னோடு நானும்
வார்த்தைகளில்
எண்ணங்களில்
கலந்தே இருக்க

எப்போதும் உடனிருப்போம்
இந்த பிரிவை போல

எழுதியவர் : (6-Jan-15, 12:43 am)
பார்வை : 78

மேலே