இன்னும் ஒரு முறை இல்லை வாழ்க்கை - சிஎம்ஜேசு

வானில் பறந்து செல்
வான் வெளியை மூடிவிடாமல்

பூமிதனில் நடந்து செல்
நீ மட்டும் நடக்க பாதை அமைக்காமல்

காற்றினை சுவாசித்துக்கொள் அதனை
உனக்கு மட்டும் என்றெண்ணி அறைக்குள் அடைக்காமல்

கடலுக்குள் நீந்திக் கொள் அதற்க்கு
அணை போட்டு உனதென்று உரைக்காமல்

மலை உச்சிதனில் இடம் பிடித்துக்கொள்
அதுதான் உன் உயர்வென்று எண்ணிவிடாமல்

அறிவியல் ஆய்வுகள் கண்டிடு
அதுதான் உன் ஆனந்தம் என்று சொல்லிவிடாமல்

கருவில் உருவாகும் நம் வரலாறு
மண்ணில் புதைந்து போகும் பின்வருமாறு

என்றெழுதிய இறைவன் தான்
நமக்கு என்றும் உயர்ந்தவர் என்றுதெளிந்து

இன்னும் ஒருமுறை இல்லை வாழ்க்கை
மனிதகுலம் ஒன்றென எண்ணி இன்புறுவோம்

தீவிர வாதங்கள் புரியாமல்

எழுதியவர் : சி .எம் .ஜேசு (7-Jan-15, 11:50 pm)
பார்வை : 90

மேலே