தூங்காதிருக்கயில் பிழைத்திருந்தவை

நெற்றியகன்ற
பிரபஞ்சப்பெண்
எச்சந்தையில்
வாங்கினாள்
பூமியைக் கவர
வெண்ணிலாப்பொட்டு?
அரிவைத் தொட்டு
தெரிவையாகாதவள்
மறையாத மின்னும்
பருக்கள்.
மேகத்துணியெடுத்து
முகம் மறைக்கிறாள்.
அவ்வப்போது ஏனிந்த
வெட்கம்?
களவானிகளுக்கு
உதவும்
திருட்டழகி.
இருந்தும்
இதயம்
இழுக்கிறாள்
இக்கருப்பழகி.
துயிலேழை
இவனுக்கு
கவிதைகளை
அள்ளி வீசும்
கொடையழகி.
--கனா காண்பவன்

எழுதியவர் : (8-Jan-15, 12:48 pm)
பார்வை : 65

மேலே