காசா - நிம்மதியா - என்றால் நிம்மதிதான் என் விருப்பம்
![](https://eluthu.com/images/loading.gif)
நெஞ்சில் கவலையோடு குறுகிப் படுத்தேன்
பட்டு மெத்தையும் முள்ளாய் குத்தியது
நெஞ்சில் நிம்மதியோடு நிமிர்ந்தே படுத்தேன்
கயிற்று கட்டிலின் கயிறுகள் அழுத்தியதும் மென்மையாய் இருந்தது.....
எனவே
காசுபணம் தரும் சுகங்கள் கானல் நீரில் மீன் பிடிப்பது - என்றும்
கருணை உள்ளம் நாம் கொள்வது - காலமெலாம் நிம்மதி அடைவது