எப்புடிம்மா இப்படி

================================================================================================
தந்தை இல்லாமலோ அல்லது இருந்தும் இல்லாமலோ தனி ஒருத்தியாய் பிள்ளைகளை வளர்த்த அம்மாக்களுக்கு இது சமர்ப்பணம்
================================================================================================
எப்புடிம்மா இப்படி
----------------------------------------------
ஜனனம் கொடுப்பவளே என்
ஜனனம் கொடுத்தவளே
உயிரின் மறு உயிரை எனக்கு
உயிராய் கொடுத்தவளே
விழிகள் நடுவினிலே
விரிந்த நெற்றியிலே - பொட்டு வைத்தவளே
இப்பூமியில் நான் வாழ
இன்னும் என்னை - விட்டு வைத்தவளே
பட்டுத்துனியல் சுத்தி
பக்குவமா பாத்தவளே - நான்
உன்னை திட்ட நீ அழுத - நீ
என்னை திட்டி நீ அழுத
உன் பேச்சு கேட்காம
உன்னை மீறி போனாலும்
பாத்திரத்தில் சோறு போட்டு
பாவி! எனக்காக இருப்பாளே
பள்ளிக்கூடம் போகவச்ச
பட்ட படிப்பு படிக்க வச்ச
ஒரு கஷ்டம் தெரியாம
ஒருத்தி என்ன வளத்துவிட்ட - என்ன
வேலையில்லா வெட்டிபய ஊர் சொன்ன
வேதனையில் - உன்
சொத்து அத்தனையும்
சொல்லாம வித்துபுட்டு
என் சொத்து நீதான்னு
என கட்டி அனச்சுகிட்ட
தொழிலாளியக்கமா என்ன
தொழிலதிபர் ஆக்கிபுட்ட- உன் பிள்ளை
என பாத்த
என் பிள்ளை அதும் பாத்த
நான் பிறந்த
நாள் முதலா
என்ன மட்டும்
எண்ணி பாத்த
உனக்கு நான் என்ன செஞ்சேன் - என்
உள் மனசு கேட்குதும்மா
உனக்கென்ன வேணுமுன்னு
உன்ன கேட்ட கேள்விக்கு
என் காலம் முடிஞ்சுருச்சு
எனகொன்னும் வேண்டாம்பா
உன்னை நம்பி வந்த புள்ள
உனக்காக வந்த புள்ள
அவள நல்லா பாத்துக்கப்பா
அனுசரிச்சு நடந்துக்கப்பா
என் கஷ்டம் இனி
எவளும் படாம இருக்கணுமே !!!!!
சாமிய கூம்பிட்டு போனாலே என்
சாமி - இதுக்கு பதிலில்ல
என் உள்ளம் கேட்குது
எப்புடிம்மா இப்படின்னு
கண்ணீர் மட்டும்!
கண்ணில் ஓடுது ஆறாக!
என் பேனா மை கூட
எழுத்தை நிறுத்தியது
அம்மா உன்
அன்பில் அதிர்ச்சியுற்று
================================================================================================
தந்தை இல்லாமலோ அல்லது இருந்தும் இல்லாமலோ தனி ஒருத்தியாய் பிள்ளைகளை வளர்த்த அம்மாக்களுக்கு இது சமர்ப்பணம்
================================================================================================

எழுதியவர் : நே.தினேஷ் (13-Jan-15, 12:27 pm)
பார்வை : 189

மேலே