புதியதோர் உலகம் செய்வோம்

கண்களில் ஏன் இந்த கண்ணீர் ?
எதற்க்காக இந்த சோகம் ?
கவலை விடு மனமே
காத்திருக்கிறது ஒரு உலகம்
மழையின் நீர்த்துளிகள்
மண்ணிற்கு பாரமில்லை
உன் கண்ணீரின் துளிகளும்
கண்ணுக்கு பாரமில்லை
மண்ணில் வீழ்ந்த மழைத்துளி
விதைகளை உடைக்கும்
விருட்ச்சத்தை உருவாகும்
கலங்காதே கண்ணே
உன் கண்ணீர் துளியும்
கணப்பொழுதில் காய்ந்து போகும்
வாழ்க்கையில் நீ ஜெயிக்கும் போது
சோகங்களை துறந்துவிடு
வாழ்க்கையை உணர்ந்துவிடு
இன்னும் பல பக்கங்கள் காத்திருக்கிறது
வாழ்க்கை புத்தகத்தில்
அந்த பக்கங்களில் உன் பெயர் பொறிக்கப்படும்
பொன் எழுத்துக்களால் ...

எழுதியவர் : கவிமோகன் (18-Jan-15, 10:01 am)
பார்வை : 120

மேலே