இது மனிதர்களே வாழாத சமுகமடா - உதயா

நீ
தீப்பற்றி எரிந்தாலும் உன்னை
திரும்பி பாக்காத சமூகமடா இது

நீ
உயிருக்கு போராடினாலும்
உதவிக்கு வராத
உணர்விழந்த பிணங்களடா
மனிதர்கள்

இதயத்தை பிடுங்கி எறிந்துவிட்டு
இரும்பின் உதவியோடு
உயிர்வாழும் கற்களடா
மனிதர்கள்

மனதினை அழித்துவிட்டு
மரக்கட்டையை மனதாக
வைத்துள்ள சாத்தான்கலடா
மனிதர்கள்

பெண்களை போற்றி
பாதுகாக்கத் தெரியாத
பிசாசுகளடா மனிதர்கள்

அடுத்தவர்களின் ஏக்கத்தை
அறிய முடியாத
அரக்கர்களடா
மனிதர்கள்

என்
தோழர்களே
தோழிகளே
நாமாவது
வாழ்ந்து காட்டுவோம்
மனிதர்கள் எப்படி
வாழவேண்டுமென்று..........

எழுதியவர் : udayakumar (23-Jan-15, 5:20 pm)
பார்வை : 125

மேலே