பகற்கனவு
Day Dreams
பகற்கனவு
காளியவள் கருணையுற்று
கானகத்தில் நள்ளிருட்டில்
கள்ளனவன் நாவினில்
சருகு உரசி அருளறிவி
கயவனவன் உருமருகி
காளிதாசன் பெயர் கொண்டு
கவிஞனென உருவெடுத்தான்;
கள்ளர் கூட்டத்தில் கலந்து
விறகு நானும் வெட்டுகிறேன்
காளி அவள் அருள் புரிந்து
என்னை கவியாக மாற்றிடுவாள்,
கவி வைரமுத்துவைபோல்
சொல்லாற்றலும் தந்திடுவாள்,
வைரமும் முத்தும் பொழிய
செல்வம் நான் ஈற்றிடுவேன்
என்று நான் நினைத்தபடி
கானகத்தின் உள்ளுடே
சோர்வுண்டு, பசியடைந்து
காளியின் இருப்பிடம் கண்டு
ஏன் நாக்கை நீட்டியபடி
அவளடி சரணமதில்
தன் மறந்து உறங்கிவிட்டேன்;
வழி நடந்த நால்வரவர்
நாக்கை நீட்டியபடி
நான் கிடந்த முறை நோக்கி
உயிரற்ற உடல் இதுவோ
என்றென உடன் கணித்து
சிதை எனதை நெருபூற்ற
தூக்கம் கலைந்து நான்
ஐயோ என்றலறி, கண் முழித்து
கனவு எனது கலைந்துவிட
வைரமது முத்தோடு
ஈர்பதனை களைந்திட்டு
கவி மொழியும் ஆசைதனை
கரை கட்டி நிலை பெயர்ந்தேன்!
சம்பத்