போலி சாமிகள்

போலி சாமிகள்

மான் தோல் போர்த்திய
ஓநாய்களை போன்று
போலி சாமிகள்
ஊரெங்கும் பல தோன்ற

அப்பாவி மனிதர்கள்
நப்பாசை பல கொண்டு
இப்பாவி மனிதர்களின்
காவி உடை கண்டு
நலம் பல நோக்கி
தஞ்சம் என அடைய

புகலைடைந்த குமரிகளை
கள்ளின் களவெறியில்
காமத்தால் ஈர்திழுத்து
ஊளையிட்டு ஓநாய் என்ற
சுய உருவம் காட்டினும்

சிதறி விழுந்த சிற்பம் போல்
சிந்தனை தடுமாறி
பேடி கும்பல் அது
நிலையற்று அலைகிறதே!

பித்தலாட்டம் புரியும்
போலி சாமிகளை
காவியுரித்து நாடு கடத்தி
செவ்வனே வாழ
முயற்சி நாம் செய்திடுவோம்!

சம்பத்

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 4:56 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 256

மேலே