ஏழையும் 'பிஸி'

ஏழையும் 'பிஸி'

குமுறும் பசியுடன்
குப்பை தொட்டியின்
எச்சில் இலைகளை
கரையும் காக்கைகள்
உறுமும் நாய்களுடன்
போட்டி நான் போட்டுகொண்டு
பொறுக்க முயலும்போது

அருகில் வந்து
தோள் தொட்டு
யாமிருக்க பயமேன் என்று
ஏமாற்றுகிறாய் இறைவா
பொறு சற்று, பசியாற
சம பங்கு காக்கைகள்
பங்காளி என் நாய்கள்
இவை யாவும் புடை சூழ
வருகிறேன் துரிதத்தில்
உன்னுடன் உறவாட!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 5:07 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 236

மேலே