பாசத்தின் இலக்கணம் அம்மா

பாசத்தின் இலக்கணம் அம்மா!
பத்து திங்கள் சுமக்கையிலே
இடுப்பு வலி தாங்கியவளே!
விழிக்கு பார்வையும், நாசிக்கு
சுவாசமும், இதழுக்கு பேச்சும்
தந்தவளே! நீ இல்லையேன்றால்
நானும் வெறும் செல்லாக்காசே!

என் வயிற்றுக்கு பசிக்கையிலே
உன் வயிற்றிக்கு கஞ்சி ஊட்டாமல்
எனக்கு ஊட்டினாய் தாயே! உன்
பிள்ளை உழைக்கின்றான்
மனையாள் மகிழ்கின்றாள். உனக்கு
பாசத்தோடு ஒரு தட்டு உணவு
எடுக்கையிலே என்னோடு சண்டையிட்டாள்.

என் மனைவிக்கு தெரியாமலே ஒழித்து
உனக்கு பொருள் தருகயிலே...., உன்
பொருட்களை எனக்கும் ஊட்டி என்
மருமகளுக்கும், பேர்பிள்ளைக்கும் கொடு
என்று கருணையோடு தந்தது என் அம்மா!

என் தாயின் உள்ளம் முத்துக்குவியல்
என் மனைவியும் பெண்தானே, செல்வம்
இல்லையேல் என்னையும் தூக்கி எறிவாள்.
அம்மா என்றால் உயிரையும் பிச்சையாக தந்தவளே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (30-Jan-15, 1:00 am)
பார்வை : 337

மேலே