இல்லத்தரசர்

ஏண்டி நீ அரசாங்க வேலைல இருக்கே. நெறையா சம்பளம் வாங்கறே. உன் கணவரைப் பத்தி இதுவரைக்கும் நீ ஒண்ணுமே சொல்லவே இல்ல. அவரு என்ன செய்யறாரு?

இல்லத்து அரசரா இருக்கறாரு.

அப்பிடின்னா வீட்டப் பெருக்கி சுத்தம் பண்ணறது துணி தொவைக்கறது பண்ட பாத்திரங்களத் தேச்சுக் கழுவறது,சமையல் செய்யறது பிள்ளைகளப் பாத்துக்கறது ஆகிய எல்லா வேலைங்களையும் அவரா செய்யறாரு?

ஆமாண்டி படிக்காத வேலைவெட்டி இல்லாத மனுசனுக்கு இல்லத்தரசர்ங்ற தகுதிய தந்திருக்கறேனே அது போதாதா?

எழுதியவர் : மலர் (4-Feb-15, 6:10 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே