நட்புக்குகூட கற்புகள் உண்டு

ஒன்பதரைமணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனாகெளம்பும் போது
ஒருத்தன்மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பதுஇருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சிபுடிச்சி கெளம்புறப்போ
அரைகுறையா குளிச்சதுண்டு
பத்துநிமிஷ பந்தயத்துல
படபடன்னு சாப்டதுண்டு


பதட்டதோடசாப்பிட்டாலும்
பந்தயத்துலதோத்ததில்ல,
லேட்டாவர்ற நண்பனுக்கு
பார்சல்மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னுநடந்து வந்து
காலேஜ் Gateநெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடாமச்சான்'னு
ஒருத்தன்பொலம்பி தொலச்சாக்கா,

வேறஎதுவும் யோசிக்காம
வேகவேகமாதிரும்பிடுவோம்
வெட்டியாரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி'தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு'காலேஜிக்கு போனா
கடங்கார professorகழுத்தறுப்பான்...
assignmentஎழுதாதபாவத்துக்கு
நாள்முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலிகிண்டல் பஞ்சமில்ல,
கூத்துகும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும்சேத்துதான் punishmentன்னா
H.O.Dயகூட விட்டதில்ல!

ஈஅடிச்சான் காபி இந்தபக்கம்னா
அதஅடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன்மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர்பாஸ் ஆனதுண்டு!

பசியிலயாரும் தவிச்சதில்ல
காரணம் -தவிக்க விட்டதில்ல...
டீக்கடையிலகடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்கபஞ்சமே வந்ததில்ல!

அம்மாஆசையா போட்ட செயினும்
மாமாமுறையா போட்ட மோதிரமும்
feesகட்டமுடியாத நண்பனுக்காக
அடகுகடை படியேற அழுததில்ல ...

சட்டையமாத்தி போட்டுக்குவோம்
சாதிசமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேலகாலபோட்டு தூங்கினாலும்
முகவரிஎன்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும்படிக்கலன்னாலும்
பிரிச்சிவச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ்வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்துபாத்த ஞாபகமில்ல!

வேலதேடி அலையுறப்போ
வேதனையபாத்துப்புட்டோம்
'வெட்டிஆபிஸர்'னுநெஜமாவே
மாறிமாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன்மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பதுபேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசுகட்டபொம்மனா நண்பனுக்கு நன்றிசொல்ல
கண்ணுஎட்டப்பனா கண்ணீர் சிந்திகாட்டி குடுக்கும்...

பக்குவமாஇத கண்டும் காணாம
நண்பன்தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்லகாரம்டா மச்சான்'னு
சமாளிச்சிஎழுந்து போவோம்...

நாட்கள்நகர,
வருஷங்கள்ஓடுது,
எப்போதாவதுமட்டுந்தான் இ-மெயிலும்வருகுது
"Hi da machan... how are you?"வுன்னு...

தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோடசீமந்தம்,
அம்மாவோடஆஸ்த்துமா,

personal loan interest,
housing loan EMI,
share marketசருக்கல்,
appraisalடென்ஷன்,

இந்தகொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவதுபேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பாபோல ஒரு காதல்,
எப்படியோவாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம்பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில்இருந்தாலும்
இண்டர்னெட்இருந்தாலும்
கம்பெனியிலஓசி phone இருந்தாலும்

கையில calling cardஇருந்தாலும்
நேரம்மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோடகுரல கேக்க
நெனச்சாலும்முடியறதில்ல

பழையபடிவாழ்ந்து பாக்க!
அலைபேசிஇருந்தும் அழைக்க முடியாமபோனாலும்
orkutஇருந்தும் scrapபன்ன முடியாம போனாலும்
'available'ன்னுதெரிஞ்சும் chatபன்ன முடியாம போனாலும்

'ஏண்டாபேசல?' ன்னு கோச்சிக்கதெரியல..
இதபெரிய பிரச்சனையா யோசிக்கவும்முடியல!
கல்யாணத்துக்குகூப்பிட்டு
வரமுடியாமாபோனாலும்,

அம்மாதவறின சேதி கேட்டதும்
கூட்டமாவந்தெறங்கி,
தோள்குடுத்து தூக்கி நிறுத்தி
பால்எடுத்தவரை கூட இருந்து

சொல்லாமபோக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டுபோன என் தோழர்கள்
தேசம்கடந்து போனாலும்
பாசம்மறந்து போகாது!

பேசக்கூட மறந்தாலும்
வாசம்மாறி போகாது!
வருஷம்பல கழிஞ்சாலும்
வரவேற்புகுறையாது!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (5-Feb-15, 9:25 pm)
பார்வை : 134

மேலே