வாதிகள் கூடினால்

ஆன்மிகம் பற்றி பேசுபவன்
ஆன்மீகவாதி !
பகுத்தறிவை பற்றி பேசுபவன்
நாத்திகவாதி !
இரண்டையும் கலந்து பேசுபவன்
அரசியல்வாதி !
தன்னைப் பற்றியே பேசுபவன்
சுயநலவாதி !
அடுத்தவர் நலத்தை பேசுபவன்
பொதுநலவாதி !
தோட்டாக்கள் மூலம் பேசுபவன்
தீவிரவாதி !
​இலக்கிய தமிழில் பேசுபவன்
இலக்கியவாதி !
மதவெறி கொண்டு பேசுபவன்
மதவாதி !
சிந்திக்க வைத்திட பேசுபவன்
சிந்தனைவாதி !
நிந்திக்க வைக்குமளவு பேசுபவன்
நித்யானந்தவாதி !
தற்பெருமை மட்டுமே பேசுபவன்
தற்காப்புவாதி !

வாதிகள் கூடினால்
வாதங்கள் வளரும் .....
சாதிகள் பெருகினால்
சச்சரவுகள் அதிகரிக்கும் .....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Feb-15, 9:14 pm)
பார்வை : 271

மேலே