காரணம் உன்னை நான் கேட்டால்
காதல் சிறகை தந்தவளே
உன் மௌனம் கலைக்க தாமதம் ஏன்
கண்களால் கனவினை விதைத்துவிட்டு
காற்றாய் மாறி கொல்லுகின்றாய்
கவிதை நூறு ஜனிக்க வைத்தாய்
தனிமையில் கொஞ்சம் புலம்ப வைத்தாய்
காரணம் உன்னை நான் கேட்டால்
கண்களால் அழகாய் பேசிவிட்டாய்
விளக்கம் தெரியாமல்
விதியென காதல் கொண்டு
தினம் தினம் சாகின்ற
ஜனித்த முதல் கரு நான்