ஏன் ஏன் ஏன் ஏன் - உதயா
வாழ்கையை எப்படி வாழவேண்டுமென
...............கற்றுக் கொடுக்கும் பெற்றவர்கள்
ஏன் இப்படித்தான் வாழவேண்டுமென
...............வாழ்ந்துக் காட்டுவதில்லை
சண்டை கோபம் இதெல்லாம் தவறு ஒற்றுமையாக
...............இருக்கவேண்டுமென கூறும் உறவுகள்
ஏன் பகைமையை மறந்து
...............ஒற்றுமையாக வாழ்ந்துக் காட்டுவதில்லை
கணவன் மனைவி எப்படி வாழவேண்டுமென
...............அறிவுரைக் கூறும் முதியவர்கள்
ஏன் பலநேரங்களின் அறிவுரைக்கு
...............கருவாக வாழ்ந்துக் காட்டுவதில்லை
வரலாற்றை படிக்க
...............கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்
ஏன் வரலாற்றை படைக்க
...............கற்றுக் கொடுப்பதில்லை
நண்பர்களுக்கு சான்றுக்
...............கூறும் நண்பர்களே
ஏன் நண்பர்களுக்கு
...............சான்றாக இருப்பதில்லை
போலிகள் மட்டும் உண்மையாய்
...............நிறைந்த உலகா இது ?
இல்லை உண்மைகள் அனைத்தும்
...............கனவாய் நிறைந்த உலகா இது ?