உணர்வு நான் உயிர் நீ
பா :---
~~~
உலகின் இருபக்கம் இரவும் பகலும்
மனதின் இருபக்கம் நினைவும் கனவும்
காதலின் இருபக்கம் விழியும் மௌனமும்
வாழ்வின் இருபக்கம் உயிரும் உணர்வும்
உணர்வுனான் உயிர்நீ தான்
========================================================================
ப ஃ றொடை வெண்பாவாக :----
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உலகின் இருபக்கம் இன்இரவும் இன்பகலும்
நெஞ்சின் இருபக்கம் உன்நினைவும் உன்கனவும்
காதல் இருபக்கம் உன்விழியும் மௌனமும்
வாழ்வின் இருபக்கம் உன்னுயிரும் உன்ணுணர்வும்
நான்உணர்வே நீயே உயிர் !
-----கவின் சாரலன்
ரசிக்கலாம் முயலலாம் வெண்பாவினர் எனப் பெருமை கொள்ளலாம் !