சிரிசிரிசிரி

நகைச்சுவை-1
''தலைவர் வீட்டுக்கு
போனேன்.பொங்கல்
குடுத்தாரு.''
''ஆச்சிரியமா இருக்கே....
அவர் வழக்கமா எல்லாருக்கும்
அல்வாதானே குடுப்பாரு.....?
*****
நகைச்சுவை-2
''எல்லாருக்கும் அல்வா
கொடுக்கிறவன் இப்ப எப்படி
இருக்கான்?''
''இப்பக் கொஞ்சம் காரமும்
சேர்த்துக் கொடுக்கிறான்''
*****
நகைச்சுவை-3
''ஒரே ஒரு ஊரில ஒரு
பயந்தாங்குளி ராஜா
இருந்தானாம்''
''அப்படின்னா பதுங்கு
குழியிலேர்ந்து கதையை
ஆரம்பி பாட்டி''
*****
நகைச்சுவை-4
மனைவி:என்னங்க.... தேங்காய் வாங்கப்
போறீங்க.எதிர்வீட்டுப் கனகா ஒரு
தேங்காய் 20 ரூபாய்க்கு வாங்கிட்டு
வந்தாளாம்.அவளை விட நாம ஒண்ணும்
குறைஞ்சு போயிடல.....அத விட அதிக
விலை கொடுத்து வாங்கிட்டு வாங்க.
கணவர்:ம்ம்ம்.......!
*****
நகைச்சுவை-5
"தகவல் அறியும் சட்டத்தைப்
பயன்படுத்தணுமா?எதுக்குத்
தலைவரே?"
"இப்ப நாம் எந்தக்
கட்சியில் இருக்கிறோம்னு
தெரிஞ்சுக்கத்தான்யா?"

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (21-Feb-15, 11:21 am)
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே