உனக்கான என் இறுதி வரிகள்சகி

என்னவனே....

என் வாழ்க்கைப்பாதை
என்னவென்று அறியாது ...

தடுமாறிய நிமிடங்களில்
மரணத்தின் எல்லைக்கே சென்றேன்...

கரம் கொடுத்து வாழ்க்கை
தர காதலை தூது விட்டாய் ...

மறுப்பு இல்லாமல்
கைக்கோர்த்தேன்....

மணவறையில் மலர்மாலை
சூடும் நிமிடங்களை எண்ணி
என் மனதில் உன்னுடன்
வாழ்கிறேன் ...

இன்று....

மறந்துவிடு என்று
வார்த்தைகளை தூவி
என்னை வழியனுப்புகிறாய்...

என் கல்லறைக்கு....

வார்த்தைகளின் வலிகளை
நீ தரும் நிமிடமெல்லாம்
கண்ணீருடன் கரைத்தேன்...

என் நிமிடங்களை ...

ஆறுதல் தந்த
உன் வார்த்தைகள் ...

இன்று என்னை
நம்பிக்கை இல்லாமல்
வதைப்பது ஏனோ ?

மன்னிக்க மட்டும்
வேண்டுகிறேன்....

என்னால் உண்டான
காயங்களுக்கு.....

உன் மனதில் என் நினைவுகள்
பாரமாக இருக்கலாம் ....

நிழலாக என்றுமே உனக்கு
பாரமாக இருக்க போவதில்லை ...

உன் விருப்பம் போல் மறந்துவிடுகிறேன்...

உன்னையோ நம் காதலையோ அல்ல ...

இன்றோடு இம்மண்ணில்
நான் வாழ்வதை....

எழுதியவர் : சகிமுதல்பூ (21-Feb-15, 12:20 pm)
பார்வை : 651

மேலே