செல்வன் வி கார்த்திக் - செல்வி இரா வேதமீனாட்சி திருமண வாழ்த்து - நேரிசை வெண்பாக்கள்

இன்று (22.02.2015) காலையில் (09.30 - 11.00 மணிக்குள்) மதுரை இலக்குமி சுந்தரம் அரங்கத்தில் நடைபெற்ற செல்வன் வி.கார்த்திக் - செல்வி இரா.வேதமீனாட்சி திருமணத்தில் நான் வாசித்தளித்த திருமண வாழ்த்து

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

இராசா இராசே சுவரியின் செல்வி
இராவேத மீனாட்சி கார்த்திக் - இருவர்
திருமண பந்தமாம் தீர்க்கமாய் பல்லாண்(டு)
ஒருமனமாய் வாழ்க உயர்ந்து! 1 *

கார்த்திக்கும், இல்லாளாம் வேதநல்லாள் இன்னமுத
ஆர்வமிகு மீனாட்சி, ஆண்டவனின் - சீர்மிகு
கீர்த்தியுடன் வாழவே சான்றோர்கள் வாழ்த்திட
பார்புகழ வாழ்வர் சிறந்து! 2 *

இரு விகற்ப நேரிசை வெண்பா

இரத்தினச பாபதி பார்வதி மைந்தன்
இர.விஸ்வ நாதன் உஷாவின் - தரமிகு
புத்திரன் கார்த்திக் புவியிலே காத்திரமாய்ச்
சத்தியமாய் வாழ்வான் மகிழ்ந்து! 1 *

மீனாட்சி சுந்தரம்ச ரோஜினி மூத்தமகன்
தேனாம் இராசா இளையமகள் - மீனாட்சி
வேதம் எனச்சொல்வோம் வேல்விழியாள் நன்றாக
நாதமாய் வாழ்வாள் நயந்து! 2 *

சகுந்தலா ராமமூர்த்தி புத்திரிஉ ஷாவாம்
மிகுதிறன் விஸ்வநாதன் மைந்தன் - வெகுநல்ல
கார்த்திக் புவியிலே கற்றதெலாம் பாரினிலே
பார்த்தே நடப்பார் பரிந்து! 3 *

பாபு இராசேந் திரன்வேதம் பேத்தியாம்
தீபவொளி வேதமீ னாட்சிகாண் - நாபணிந்து
பேசிடும் நல்லாளே பார்புகழ நல்லபடி
பேசவே வாழ்வாள் புரிந்து! 4 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-15, 6:16 pm)
பார்வை : 111

மேலே