----------------ஜாதகம்------------------

சிறு வயதில் துறு துறு என்று
அணில் போல் ஓடி ஆடிக்கொண்டுயிருந்தேன்
சிலர் சனி ஆட்டுது அதான் இப்படி
ஆடுறான் என்று வசைபாடினார்கள்

வளரும் வயதில், அறியாத நோயில்
அம்மா படுத்துக்கொணடால்
என் நேரம் தான் அதற்கு காரணம் என்று
காரணம் சொன்னார்கள்.

பள்ளி சென்ற வயதில், எதிர்வந்த பேருந்தில் மோதி
அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்
என் பிறந்த நேர கணக்குபடி அப்பனை
படுக்கவைக்குமா சொன்னார்கள் சிலர்

கல்லூரி செல்லும் வயதில் , தீராத பண கஷ்டத்தில் குடும்பம் தடுமாறியது
உள்ளூர் கொடங்கி உலூக்கி சொன்னான்
என் கிரக கணக்கில் செலவு மட்டுமே வரவாம்
குரு பெயர்ச்சி வரை என்னை இடம்பெயரசொன்னார்.

விடுதி வாழ்வின் ஆரம்பத்தில், வயிற்று வலியால் துடித்துப்போனேன்
சூரியன் உக்கிரமா இருப்பதால் தான்
இந்த பிணி என்றும் சந்திரன் பார்வை பட்டால்
எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னாள் பாட்டி

வேலை தேடி ஏதும் கிடைக்கவில்லை
படுத்து விட்டத்தை பார்க்கும் போது, அம்மா வந்து சொன்னாள்
என் கட்டங்களின் படி கைகட்டி வேலைபார்க்கும்
நிலை எனக்குகிடையதாம்...

அப்பா பார்க்கும் தொழிலை விரிவாக்கலாம் என்று கிளம்பிய போது
இன்னும் இரண்டு வருடத்திற்கு ஏதும்
செய்யக்கூடதாம்...
உள்ளூர் ஜோசியர் சொன்னார்.

விட்டை தூலவி இருந்த அத்தனை
ஜாதக புத்தகத்தையும் எடுத்து
பின்புறம் எரிந்துக்கொண்டிருந்த அடுப்பில்
போட்டேன்....

இந்த ஜாதக கட்டங்களால்
என் வாழ்வு மட்டும் அடைக்கப்பட்டுயிருக்கட்டும்
இந்த ஜாதக உருவங்களால்
என் வாழ்வு மட்டும் எரியட்டும்

என் தம்பியும்
என் தங்கையும்
இதற்கு இரையாககூடாது
அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்..

--இப்படிக்கு மூடநம்பிக்கையால்
வாழ்வை தொலைத்த சாதரண மனிதன்.

எழுதியவர் : ஜாதகம் (23-Feb-15, 11:21 am)
சேர்த்தது : தங்கமாரியப்பன்
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே