மனங்கொத்தி பறவை

என் காதலை
மறுத்திருந்தால்,,
என்றோ மறந்திருப்பேன்
உயிரே,,
நீயோ
முறைப்புக்குள் மறைக்கின்றாயே
உன் காதலை,,
ஒவ்வொரு நிமிடமும்,,
மரணிக்கிறேனடி கண்மனியே,,
மணித்துளியெங்கும்
என் விழிகளில்
வழிந்தோடும் உன் நினைவலைகளில் மூழ்கிய படியே,,
மறுஜென்மத்திலேனும்
உன் மனம் கொத்திப் பறவையாய்
நான் பிறக்க வேண்டி!!

எழுதியவர் : புதுமை தமிழினி (23-Feb-15, 3:18 pm)
பார்வை : 142

மேலே