நீலவான ஆடைக்குள் நித்திரையில் இருப்பவளே

நீலவான ஆடைக்குள்
நித்திரையில் இருப்பவளே !!
நித்தம் முகம் காட்டுகிறாய்
நிலாவென்று நீ !!!
சொக்க வெள்ளிப்பாற்குடமோ
சொக்குதே உன்னழகு- உன்
பால்முகம் மாறாதோ??
காலைப்பரிதி கண்டவுடன்
கடலில் மூழ்கி - நீ
காணாமல் ஓடிமறையும்
மாயமென்னவோ??
நெடுமலையில் துயிலெழுந்து
கடும்வெயில் துயர்ப்போக்க
காடுமலை கடந்துவருபவளே
உந்தன் வனப்புக்கூற
வரிகளில்லை என்னில் ......

எழுதியவர் : சுடர்விழி.இரா (25-Feb-15, 11:24 pm)
பார்வை : 570

சிறந்த கவிதைகள்

மேலே