ஆயுள் குறைவது அரசின் பனைமரத்துக்கு அழகா
இன்றைய (26.02.2015) தினமலரில் பதிவாகியுள்ள 'என் பார்வை' என்ற பகுதியில் உள்ள "ஆயுள் குறைவது 'அரசின்' பனைமரத்துக்கு அழகா!" என்ற திரு. குமரி அனந்தனின் கட்டுரை மிக அருமையும், பொருளுடையதும் ஆகும்.
திரு. குமரி அனந்தனின் கட்டுரையையும், அவரையும் பாராட்டி இரு வெண்பாக்கள்.
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
முனைவரென்ற பட்டமே காசு கொடுத்து
புனையுமிக் காலத்தில் தாங்கள் - பனையை
தினையளவு கட்டுரையில் சொல்லி உரைத்தீர்
பனையாண்டு வாழ்க உயர்ந்து! *
இரு விகற்ப நேரிசை வெண்பா
முனைவரென்ற பட்டமே முற்றிலும் தக்க
பனைநல வாரிய முன்னாள் - கனிவுத்
தலைவர் குமரி அனந்தன் பனையாய்
நிலைத்தவர் வாழ்க மகிழ்ந்து! *