தனிமையின் கொடுமை

யாருடனாவது பேச ஆசையாய் இருக்கிறது ...
யார் கேட்பார்கள் என் புலம்பலை???
என் மடியில் படுத்து உறங்கும் குழந்தையை அள்ளிக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும் ...
ஆனால்...
அப்போதும் அக்குழந்தை படுத்து உறங்கி கொண்டு தான் இருக்கும்...
என்ன ஆச்சரியம் !
குழந்தை வடிவில் பொம்மை ...
இத்தனிமை சாவை விட கொடுமை ...
எனத் தெரிந்திரிந்தால்....
நான்....
என்னை பெற்றவளைத் தனியே தனிமையில்
கொடுமை படுத்திரிக்க மாட்டேன் ...
அன்று நான் செய்த பாவம்
இன்று எனக்கே சாபமாய் பலித்தது...

எழுதியவர் : preethi mai (2-Mar-15, 11:12 am)
சேர்த்தது : preethi mai
பார்வை : 1101

மேலே