யாரது யாரது பெண்மையா
நேற்று கொடியில் போட்டிருந்த
என் நினைவுச் சட்டையை
எடுத்துச் சென்றது யார்..?
பரணில் நான் ஒளித்து வைத்த
மனதின் காதல் இனிமை மூட்டை
கவர்ந்து சென்றது யார் ?
எரியும் நெருப்பாய் மனதில் இருக்கும்
அவளின் ஆசை முத்தப் போர்வை
திருப்பிப் போட்டது யார்?
அவளின் குவிந்த இதழ்கள் காட்டிய
புன்னகை அரும்பு பூக்களை
பறித்துச் சென்றது யார்..?
ஒ..அவைகளை செய்தது
அவளேதானா?
கல்லால் நெஞ்சம் செய்து..
அவளை என்னிடம் பழக விட்ட
கடவுளே..
உன் விளையாட்டுக்கு
கிடைத்த பொம்மை
நான்தானா..?