விழியின் மொழி தென்றலில் 555

மனமே...

மறந்து போ என் நெஞ்சே
அந்த வஞ்சியை நினைக்க வேண்டாம்...

சொல்லாமல் சொல்லி
சென்றாள்...

என்னை இறக்க
சொல்லி...

அவள் பிரிவில்...

அவள் நினைவை விட்டு
பறந்து செல்ல...

நான் பறவையும் அல்ல...

எளிதில் மறந்துவிட என் இதயம்
பாறையும் இல்ல...

என் கண்களும்
உறங்கவில்லை...

அவள் நினைவுகளும்
என்னில் தேயவில்லை...

நான் இறந்தால்
உன்னை மறப்பேன்...

இறந்துவிட்டால் உன் நினைவும்
மறந்துவிடும்...

என் நெஞ்சே அவள் காதில்
போய் சொல்...

அவள் சுவாசித்த மூச்சு
காற்று கூட...

என் சுவாச காற்றோடு
கலக்க வேணாம்...

மனம் மட்டும்
பறந்துசெல்கிறது...

விண்ணைத்தாண்டி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Mar-15, 5:12 pm)
பார்வை : 135

மேலே