பொறாமை

உள்ளம் சொல்லும் வார்த்தைகளை வருத்திக் கொண்டு வெறும்
உதடுகள் சொல்லும் வார்த்தைகளின்
வெளிப்பாடுதான் பொறாமை...

சூரியனின் உதடுகள்
நிலவிடம் சொன்னது
உன்னிடம் அழகு இல்லை..

நிலவின் உதடுகள்
சூரியனிடம் சொன்னது
உன்னிடம் ஒளி இல்லை..

கடலின் உதடுகள்
மணலிடம் சொன்னது
உன்னிடம் அலை இல்லை..

மணலின் உதடுகள்
கடலிடம் சொன்னது
உன்னிடம் மணல்கோபுரம் இல்லை..

மலரின் உதடுகள்
இலையிடம் சொன்னது
உன்னிடம் மணம் இல்லை..

இலையின் உதடுகள்
மலரிடம் சொன்னது
உன்னிடம் ஆயுள் இல்லை..

மரத்தின் உதடுகள்
வேரிடம் சொன்னது
உன்னிடம் நிழல் இல்லை..

வேரின் உதடுகள்
மரத்திடம் சொன்னது
உன்னிடம் நிலை இல்லை..

இதயத்தின் உதடுகள்
உதட்டிடம் சொன்னது
உன்னிடம் காதல் இல்லை..

உதட்டின் உதடுகள்
இதயத்திடம் சொன்னது
உன்னிடம் காமம் இல்லை..

என்னை சற்று மன்னிக்கவும்
மனிதர்கள் கொள்ளும் பொறாமையை
என்னால் மறித்து நிறுத்தி
இதில் குறிக்க முடியவில்லை..

இப்படி பொறாமை கொண்ட
உயிர்களே உலகத்தில்
அனைத்துமே அழகுதான்
உள்ளம் சொல்லும்
உண்மைகள் உங்களை
உருத்துவதையும்
வருத்துவதையும்
நிறுத்திக் கொண்டால்.


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (11-Mar-15, 10:23 am)
சேர்த்தது : செ மணிகண்டன்
Tanglish : poraamai
பார்வை : 83

மேலே