காதலின் உணர்வுகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!

நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்
-கொடுத்தது நானானேடீ!

என் காதல் உண்மை என்னுயிரைப் போல....
பகலில் நாம் கண்ட கனவுகள் நனவாக,
என்னுயிரும் உன்னுயிரும் ஒன்று என்று..,
சொல்லும் நாளும் தூரமில்லை.,உன் சம்மதத்திலேயே....!!!!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (15-Mar-15, 9:42 am)
Tanglish : kathalin unarvukal
பார்வை : 386

மேலே