இந்த 24ம் வயதில் நான்---ப்ரியா

இல்லத்திற்கு இளையவளாய்
பரணியில் பிறந்து
தரணி ஆளும் தங்க தாரகையாய்

எந்தையும் தாயும்
அன்போடு அணைக்கும்
செல்ல மகளாய்

கற்றுக்கொடுத்த குருவுக்கு
நல்ல மாணவியாய்

கற்றுக்கொடுக்கும் மாணவர்களுக்கு
நல்ல குருவாய்

உற்றாரும் உறவினரும்
போற்றும் நன் மங்கையாய்

அலுவலகத்திலும் புகழோடு
பெருமை சேர்க்கும்
நல் நங்கையாய்

என்னை நேசிக்கும் ஜீவன்களை
நேசிக்கும் சிநேகிதியாய்

இயற்கையின் காதலியாய்
இன்றுவரை
வாழ்ந்துகொண்டிருக்கும் நான்

கடந்த பாதையில் நடந்த
சுகங்களை மனதில் ஏற்றி
சோகங்களை வெளியில் தூற்றி

என்னை உண்மையாய்
நேசிக்கும் உறவுகள் அனைவரின்
அன்பு மழையில் நனைந்து
இன்னும் அழகாய் மகிழ்ச்சியாய்
இருப்பதாய் உணர்கிறேன்

ஏனோ தெரியவில்லை?
இந்த 23-ம் வயதை கடந்து
24ஐ தொடும்போது
எந்நாளை விடவும் இந்நாளை
இன்னும் அதிகமாய் நேசிக்கிறேன்
நான் நானாய் இருக்கிறேன்
நான் இந்த "நான்" என்ற வார்த்தையில்
நான் முழுமையடைகிறதாய் உணர்கிறேன்........!





(எனக்கு இனிய வாழ்த்துக்கள் கூறி
அன்பு மழையில் நனைய வைத்து
குழந்தையாய் உணரவைத்த
உறவுகள் அனைவரின் வாழ்த்தையும்
பெற்றுக்கொள்வதில் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன்....)

எழுதியவர் : ப்ரியா (19-Mar-15, 4:13 pm)
பார்வை : 235

மேலே