தாய்க்கு பரிசா

பசிகொண்டு அழுதால் ஆற்றிவிடும்
வலிகொண்டு அழுதால் போக்கிவிடும்
தாலாட்டி உறங்கவைத்து ..
தலைநிமிர்த்தி நடக்கவைத்த
தாய்மைதனைப் போற்றிடவே
தாய்மைக்கு நாட்டைத் தந்து
தாய்நாடு என்றழைத்தோம்
தாய்மைக்கு மொழிதந்து
தாய்மொழி என்றழைத்தோம்
இவைமட்டும் போதாதென்றா
தனியில்லம் தூரம்தந்து..
முதியோரில்லம் துரத்திவிட்டோம்

எழுதியவர் : moorthi (23-Mar-15, 10:39 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே