I LOVE YOU

நின்று போன மழைக்கூட
கண்ணீர் வடிக்கும்
உன்னை தீண்ட முடியாததால்

நான் விடும் மூச்சு காற்றுக்கூட பிரிய மனமில்லாமல் உன் பின்னாலே
வருகிறது புழுதிக்காற்றாக

வீதியில் அத்தனை பூக்கள் இருக்க
வண்ணத்துப்பூச்சிகள் அனைத்தும்
உன் இதழில் தேன் எடுத்துச்செல்கிறது

உனக்கென இத்தனை கவி எழுதிய எனக்கு....
உன்னிடத்தில் காதல் சொல்ல தமிழிழே பஞ்சம்,....
அதனால் என்னவோ ஆங்கிலத்தில் திருடுகிறேன்.....
I LOVE YOU

எழுதியவர் : நவின் (1-Apr-15, 12:33 am)
பார்வை : 185

மேலே