என்னவனே

விழியின் அருகே சிறு முத்துக்கள்!
வருத்தத்தின் அடையாளமோ அவை ??
பூரிப்பின் உச்சம் அன்றோ !!
வருவாய் என பார்த்திருந்த காலங்கள்
கனவோ என கரைந்து போக,
நினைவாக்கினாய் என் கனவுகளை !
அண்டமும் அணுவானதோ
அறிவோ துரும்பானதோ !
கற்பனையும் வளம் பெற்றதோ
கல்லையும் ரசிக்கும் கலை
கற்று தேர்ந்ததோ என் கண்கள் !!
மேகங்கள் நகர்ந்து உனக்கு வழியமைக்க அதைக்
காணும் கடலலையை என் புன்னகை !
தேடி வந்து என் காதலை சொல்ல ,
துடிக்கிறதே என் இதயம் இரட்டிப்பு வேகத்தில் -
உனக்கும் சேர்த்து !!!