சிந்திங்கள்

சிந்தனை:1
குழந்தையின் அனுமதி இன்றி
நாம் ஆயிரம் முத்தங்கள் கொடுத்து
விடலாம்.ஆனால் ஒரு குழந்தை
நினைக்காமல் அதனிடம் இருந்து
ஒரு முத்தத்தைக் கூட பெற முடியாது.

சிந்தனை:2
குழந்தைக்கு ஊட்டி விட்ட தட்டில்
மிச்சமிருக்கும் ஒரு பருக்கைக் கூட
ஒரு உருண்டையாகத்தான் தெரியும்
அம்மாக்களுக்கு.

சிந்தனை:3
சொந்தக்காலில் நிற்கும் போது தான்
தெரிகிறது.இதுவரை நம்மைத்
தாங்கியவர்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என.......,

சிந்தனை:4
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால்
உங்களுடைய காலில் காலில் நடந்து போங்கள்
மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப்போக விருப்பாதீர்கள்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (4-Apr-15, 5:01 pm)
பார்வை : 411

மேலே