சமமென்று கொள்வோம் உயிர்களை

இயற்கை எழிலிங்கே வழிகிறது
--- இரவாகிட மாலைவேளை விரைகிறது !
கார்மேகம் விண்ணில் நிறைந்தது
--- கண்குளிர் காணொளிக் காட்சியானது !

சுகமாகும் குன்றிய இதயங்களும்
--- சுயநலமும் மறந்திடும் சூழலால் !
திரும்பிடும் மேய்ந்திட்ட பசுசிசுக்கள்
--- விரும்பிடும் சாய்ந்திட்ட பொழுதிது !

இல்லத்தில் பணிகள்பல இருந்தாலும்
--- இல்லாமல் ஓய்வாய் ஒருபொழுதும்
இல்லத்திற்கு கால்நடையை கவனமாய்
--- இல்லத்தரசி அழைத்துவரும் காட்சியிது !

விழுந்திடும் சாரல்களும் அதிகமானால்
--- பொழிந்திடும் மழையும் கூடுமென்பதால்
ஐந்தறிவு உயிர்களும் நனையுமென்று
--- தாயுள்ளம் நடைபோடுகிறது வேகமுடனே !

அன்பினை காட்டிடுவோம் உயிர்களிடம்
--- அகிலத்தில் வாழ்ந்திடுவோம் பண்புடனே !
எடுத்து சென்றோரும் எவருமில்லையே
--- கொடுத்து செல்வோம் இயன்றவரை !

சமமென்று கொள்வோம் உயிர்களை
--- சமுதாயம் உணர்ந்திட உரைத்திடுவோம் !
பிறந்திட்டோம் நாமும் மனிதர்களாய்
--- பிறரும் வாழ்ந்திடவே உழைத்திடுவோம் !

பழனி குமார்

( படம் உதவி ....முகநூல் )

எழுதியவர் : பழனி குமார் (6-Apr-15, 8:16 am)
பார்வை : 141

மேலே