அம்மம்மா என் அம்மா

அம்மம்மா என் அம்மா !!
உன் கண்களின்
ஆனந்த கண்ணீர் கூட
என் நெஞ்சம் தாங்கதம்மா !
பனித்துளிகளை உருக்க
பாசத்துடன்
ஓடோடி வந்தேன்
பார்வையை என் மீது வீசம்மா !
பூவிதழ் கரங்களால்
ஒத்துகின்றேன் உன்
புன் சிரிப்பை என் மீது
வீசம்மா !
கண்களை
கண்ணீரால் திரை போட்டு
என் இதயத்தை மூடி விடாதேம்மா !
என் உலகம்
நீ தான் அம்மா !
உன் வலிகளுக்கு
நிவாரணமாய்
நான் உள்ளேன் அம்மா !
அழாதே அம்மா
அழாதே !
===============கிருபா கணேஷ் =========================