மலிவான விலையில் மனித உயிர்கள்

மலிவான விலையில்
மனித உயிர்கள் ..(.!?)

”மரங்களைக் காக்க
மனிதர்களை அழி”
ஆந்திர அரசின்
ஆணவ கோஷம்

செம்மரம் காக்க
செங்குருதியால்
அபிஷேகம்

கால் வயிற்றுக்
கஞ்சிக்கு கலங்கி
நின்ற ஏழையை
காவு கொடுத்த
அரசாங்கம்

மனிதனுக்காக
மரமா?
மரத்திற்காக
மனிதனா?

மரணத்தால் வீழலாம்
மனிதன்
மரத்தால் வீழலாமா?

மரங்களும் ஏறின..
உடன்கட்டை
மரித்த உடல்களோடு..
.
வீழ்ந்த மரம்
மறுபடியும் முளைக்கலாம்..!
ஆனால் ..
வீழ்ந்த உயிர்........? ,
இழந்த உறவு....?
இறக்கப்பட்ட தாலி...?

ஓ...! மனிதா
மரத்திற்கு காட்டும்
கருணையை
மனித
மரணத்திற்கும் காட்டு.

எழுதியவர் : இரா.முத்துசாமி எம்.ஏ.,பி.எட (12-Apr-15, 6:09 pm)
சேர்த்தது : இராமுத்துசாமி
பார்வை : 107

மேலே