ஆழ்துளை கிணறு

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போன தமிழ்செல்வனின் ஆன்மா,,
-------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா ............
இரண்டரை வருடங்களுக்கு முன்பு
உன் கருவறையில்இருந்தது போல்
முடங்கியிருதேன்.

அப்போது உன் குரல் கேக்கும்
ஆறுதல் தந்தது.
இன்று உன் குரல் எங்கே அம்மா?

முன்னூறு அடி ஆழத்தில்
மூச்சு திணற காத்திருந்தேன்
உன் கைகள் என்னை எப்படியாவது
மீட்டுவிடும் என்று !

ஏமாற்றம்........ எந்திர கைகள் தான் வந்தது
என்னை தூக்கி செல்ல !
எங்கே அம்மா உனது அந்த அழகான கைகள்!

அழுது புலம்பாதே !
இன்னும் சில மதங்களோ
வருசங்களோ கழித்து வருவேன்
உனக்கு பிள்ளையாக !

வந்து உரைப்பேன் இந்த உலகுக்கு ......
ஆழ்துளை கிணறு தண்ணீருக்காக மட்டுமே !
அழுது புலம்பும் உன் போன்ற
அன்னையர்களின் கண்ணீருக்காக அல்ல என்று!

எழுதியவர் : (12-Apr-15, 7:32 pm)
பார்வை : 159

மேலே