ஊர் முழுக்க பரகசியமானதே

என்னைவிட மன உறுதி ...
யாருக்கு வரும் என்று ...
கர்வத்தில் இதுவரை ...
வாழ்ந்தேன் .....!!!

எல்லாமே
பொய்யாய் போனது உயிரே ...
உன்னை கண்ட நொடியில் ...
தோன்றிய காதலால் ...
ஊர் முழுக்க பரகசியமானதே ...!!!
+
குறள் 1254
+
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 174

எழுதியவர் : கே இனியவன் (14-Apr-15, 10:45 am)
பார்வை : 52

மேலே