ஓட்டுனர் கவனத்திற்கு

பரபரப்பான சாலையொன்றில்
பள்ளமொன்று தென்பட்டது

குண்டும் குழியும் தெரிவதில்லை
குடித்து விட்டு செல்வோருக்கு

வேடிக்கை வினையாகும்
வெறித்தனமாய் செல்வோருக்கு

பார்வைதனில் பட்டதெனில்
பக்குவமாய் கடந்திடுவோம்

பாதை விளக்கு இல்லையெனில்
பரலோகம் சென்றிடுவோம்

கூவி அழைத்தாலும் கூக்குரல்
கேட்காது
உயிரும் உடலும் பிரிந்த பின்...!!!!!

எழுதியவர் : (15-Apr-15, 8:42 pm)
பார்வை : 292

மேலே