ஏன் வாடி விழுந்தாய்

உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம்
காதல் தோற்றதேன் ...?

பூவை தந்து காதல்
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?

அழவும் ஆசையாய்
இருக்கிறது - நீ
சுட்டுவிரலால் கண்ணீரை
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;793

எழுதியவர் : கே இனியவன் (23-Apr-15, 9:08 am)
பார்வை : 302

மேலே