நிறுத்துமடி

என் விழிகள்
கனவில் எழுதிய
கவிதை ஒன்று
காணாமல் போனது
கண்டு கண்ணீர் விட்டது
ஒரு வேளை
என் இதயம்
என் உயிரில்
வரைந்த ஓவியம்
ஒருகணம் மறைந்தால்
என் இதயம்
துடிப்பை அல்லவா நிறுத்துமடி.

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (5-May-11, 8:43 am)
பார்வை : 250

மேலே