சாம்பார் காதல்

சாம்பார் காதல் .... !
------------------
நிலவை காதலித்தேன்
ஆகாயத்தில் அந்தரத்தில்
நான் தொங்கி கொண்டிருக்கிறேன்
நீ எப்படி என்னை நெருங்குவாய் என சிரித்தது ?
உலாவரும் காற்றை காதலித்தேன்
நானோ உருவம் இல்லாதவள்
உன்னால் எனை எப்படி உணர்வுடன்
தொட முடியும் என்று எளனம் செய்த்து !
நிலத்தினை காதலித்தேன்
நிம்மதியாய் நீ வாழ இடம் உணவு
யெல்லாம் இப்போது தருகிறேனே
போதாதா !
இறுதி காலத்தில் வா
இடம் தருகிறேன் என்றது !
நீரை காதலித்தேன்
உன் உடல் அழுக்குடன்
உள்ள அழுக்கையும் எனை வைத்து கழுவிகொள்
காதல் மட்டும் வேண்டாம்
எனை காதலித்தால்
சுனாமியாய் வந்து உன்னை சுருட்டி விடுவேண் என்று பயம் காட்டியது !
சரி உருவம் உள்ள பெண்ணை
காதலித்தால்
உன் மோகத்துக்கு எனை போக பொருளாக்க வேண்டாம்
நான் உனக்கு தாயுமாணவள் சேயுமாணவள்
தமக்கையாணவள்
அன்பு தோழியானவள்
என்கிறாள்
வேண்டாமடா இந்த சாம்பார் காதல் !

எழுதியவர் : (25-Apr-15, 1:43 pm)
சேர்த்தது : m arun
Tanglish : saampaar kaadhal
பார்வை : 248

மேலே