என்னவள் 3 ~~ அர்ஷத்

ஜன்னலோர சீட்டுக்கு
எல்லோரும் அலைவார்கள்
ஜன்னலோர சீடுக்களெல்லாம்
உனக்காக அலைந்ததைப்பார்தேன்
நீ பேருந்தில் ஏறும் போது ....

விஞ்ஞானம் சொல்கிறது
பூ பறிக்கும்போது பூ அழுகிறதாம்
உனக்காக பறிக்கும்போது மட்டும்
சிரிப்பதேனடி .....

டார்வின் உன்னை பார்த்திருந்தால்
தன் கோட்பாடை மாத்திருக்ககூடும்
தேவதைகளில் இருந்து தான் நீ என்று ....

என் புத்தகத்தை திறந்து பார்த்தவன்
சொன்னான் 'மயிலிறகு அழகா இருக்கு ' என்று
~~ நான் வைத்திருந்ததோ நீ சிக்கெடுத்த முடியைத்தானடி ....

புவி ஈர்ப்பு விசையில்
சிக்காத தென்றல் ~~ இந்த
பூவின் ஈர்ப்பு விசையில்
சி(சொ)க்குவதேனடி ......

ஆய்வகத்தில் நான் கண்ட கோணிகள் பிளாஸ்க்
~~ உன் இடுப்பு ...

என்னையும் கவிதை எழுத வைத்த
எழுதுகோல் ~~ உன் நாணம் ...

நான் எழுதுவதையும் கவிதை என்று தாங்கிநிற்கும் காகிதம்
~~ உன் தேகம் ....

பன்னிரண்டு நொடிக்கொரு முறை
பூக்கும் குறிஞ்சிப்பூ ~~ உன் நகை

பழக பழக பால் தான் புளிக்கும்
பழக பழக காதல் தா(தே)னே இனிக்கும் .....

எழுதியவர் : அர்ஷத் (1-May-15, 4:26 pm)
பார்வை : 139

மேலே