நீறான் கவிதை
*
உன் விழிகளில்
நானிருக்கிறேன்
உன் உணர்வுகளில்
என் எண்ணங்கள்
ஊர்கின்றது
உன் உதடுகளில்
என் எச்சில் இருக்கின்றது
உன் காதுகள் எப்பொழுதும்
என் வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கின்றது.
உன் மூச்சு சுவாசம்
என் மீது வீசி தழுவுகின்றது
உன் வெட்கங்கள்
என்னைக் கண்டதும் வந்து
மௌனமாக்கி விடுகின்றது
நம் சந்திப்புக்கு சமாதானம்
செய்து வைக்கின்றது
வெறுப்பை விரட்டி
மகிழ்கின்ற இருமனங்கள்.
நீ நான் நான் நீ
நான் நீ… சங்கமம்….!!
*