நீ வேண்டும் என் உயிரே

முரணும் முறைப்புமாய்
நீயும்
கெஞ்சலும் கொஞ்சலுமாய்
நானும்
முதல் முறை எனக்குள்
இயற்கை அனர்த்தம்
இதயத்தின் ஓரத்தில் .....

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

நீ சிரித்துப் பேசிய தருணத்தில்
என்னை
மறந்து போனேனா ..?
இல்லை
அன்பெனும் வேல்தொடுத்து
சிறை பிடித்து போனாயா
..???

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

ஆளில்லா வனத்தினில்
விரல்பிடித்து நடந்தபின்
இதுவரை போதும் என்று எதை நம்பி விட்டுச் சென்றாயோ ...????

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

காரிருள் சூழ்ந்த கானகத்தில்
கண்ணீரோடு தவிக்கின்றேன்
கண்ணா என் கரம்கோர்த்து
கரை சேர்க்க வந்துவிடு ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

தேவதையாய் நான் இல்லை
உன்மேல் திடமான காதல் உண்டு
தாரமாகி உனக்கே நான் தாயுமாகும் திறனும் உண்டு...
விலகாதே என் உயிரே
என்றும் வேண்டும் நீ எனக்கு ..!!!

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

எழுதியவர் : கயல்விழி (5-May-15, 7:42 am)
பார்வை : 826

மேலே