அப்பா

நான் கருவறையில் இருந்த
நாள் முதல் என்னை காண
ஏங்கிய உனது கண்கள்....

என் அழுகுரல் கேட்டதும்
உன் கண்ணீல் வந்த கண்ணீர்
என் பாதம் தொட்டு பார்த்து
நீ அடைந்த சந்தோசம்.......

என்னை வயிற்றில்
சுமக்கவில்லை......
ஆனால்,
உன் நெஞ்சில்
சுமந்தாய்......

எனக்கான தேவை
அனைத்தும் பூர்த்தி செய்தாய்
என் வாழ்நாள் முழுவதும்
என் சந்தோசத்திற்காக
வாழ்ந்தாய்......

உறவுகள் பல இருந்தாலும்
உன் உறவு மட்டுமே
என் வாழ்க்கைக்கான
சொர்கத்தை தந்தது......

வருடங்கள் ஓடின
ஒரு தந்தையாய்
எனக்கு செய்ய வேண்டிய
கடமைகள் அனைத்தும்
செய்தாய்.....

ஒரு நாள் என்னை விட்டு
வெகுதூரம் சென்றுவிட்டாய்
உன்னை தேடி அலைந்தேன்
எங்கும் நீ கிடைக்கவில்லை.....

அன்று
நீ சொன்னது என்
நினைவுக்கு வந்தது
எங்கேயும் எப்பொழுதும்
என்னை விட்டு செல்லமாட்டேன்
என்று சொன்னது.......

ஆம்,
உண்மை தான்
எனது தந்தை என்னை விட்டு
செல்லவில்லை
எனது மகனாக என் மடியில்......

ஒரு தந்தையாய் இருந்து
நான் ஆசைப்பட்டது
அனைத்தும் எனக்காக
செய்தாய்...

நான் இறுதியாய்
மகளாய் ஆசைப்பட்டது
என்னை தன் உயிர் என
நினைத்து வளர்த்த

உன்னை என் உயிராய்
சுமக்க ஆசைப்பட்டது.......

அதையும் செய்தாய்
எனக்காக......

நீயே என் மறுபிறவியிலும்
தந்தையாய் மட்டுமல்ல
தாயாகவும் வேண்டும்
என ஆசைபடுகிறேன்......

என் ஆசையை
நிறைவேற்றுவாய்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்....
மறுபிறவிக்காக.........!!!!!!!!!!!!

எழுதியவர் : ரா. பிரவீனா கிருஷ்ணன் (6-May-15, 4:58 pm)
Tanglish : appa
பார்வை : 108

மேலே